தற்போதைய செய்திகள்

தங்கவேலால் சூரனை வதம் செய்த முருகன் - அரோகரா...அரோகரா என கோஷமிட்ட பக்தர்கள்

தந்தி டிவி

தங்கவேலால் சூரனை வதம் செய்த முருகன் - அரோகரா...அரோகரா என கோஷமிட்ட பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை, சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் கொண்ட ஜெயந்திநாதர், தன்முகத்தோடு வந்த சூரபத்மனை வதம் செய்தார். பின்னர், மாமரமாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மனை வதம் செய்த, சுவாமி ஜெயந்திநாதர், சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்வில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை