தற்போதைய செய்திகள்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு போடப்பட்ட சாலை... சாலை அமைத்து மூன்றே நாள்களில் சேதம்... அதிருப்தி அடைந்த மக்கள்

தந்தி டிவி
• பொன்னேரியில் புதிதாக போடப்பட்ட சாலை மூன்றே நாள்களில் சேதமடைந்ததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். • திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தது. • இதனால் பல்வேறு சாலைகள் சேதமடைந்து காணப்பட்டது. • இந்நிலையில் பொன்னேரியில் இருந்து ஆலடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. • மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது இப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது. • ஆனால் போடப்பட்டு மூன்றே நாள்களில் சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். • இதனால் சேதமடைந்து காணப்படும் சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை