தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவிகளை ஆபாச படம்பிடித்த விவகாரம்.. கர்நாடகாவில் அதிரடி காட்டப்போகும் குஷ்பு

தந்தி டிவி

கர்நாடகாவில், கல்லூரி மாணவிகளை ஆபாச படம் பிடித்ததாக கூறப்படும் விவகாரத்தில், நேரில் சென்று விசாரிக்க உள்ளதாக, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கர்நாடக மாநிலம் உடுப்பி கல்லூரியில், உடன்பயிலும் மாணவிகளாலேயே, கழிவறையில் ஆபாச படம் பிடித்ததாக வெளியான செய்தி தொடர்பாக கல்லூரிக்கு நேரில் செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாணவிகள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற முறையில் நேரில் சென்று, மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களின் ஒழுக்கத்தை கெடுக்கும் விதமாக யாரும் விளையாட கூடாது என்றும் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்