தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவிகளை ஆபாச படம்பிடித்த விவகாரம்.. கர்நாடகாவில் அதிரடி காட்டப்போகும் குஷ்பு

தந்தி டிவி

கர்நாடகாவில், கல்லூரி மாணவிகளை ஆபாச படம் பிடித்ததாக கூறப்படும் விவகாரத்தில், நேரில் சென்று விசாரிக்க உள்ளதாக, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கர்நாடக மாநிலம் உடுப்பி கல்லூரியில், உடன்பயிலும் மாணவிகளாலேயே, கழிவறையில் ஆபாச படம் பிடித்ததாக வெளியான செய்தி தொடர்பாக கல்லூரிக்கு நேரில் செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாணவிகள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற முறையில் நேரில் சென்று, மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களின் ஒழுக்கத்தை கெடுக்கும் விதமாக யாரும் விளையாட கூடாது என்றும் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்