தற்போதைய செய்திகள்

சுறாவின் வயிற்றுக்குள் உடல் பாகம்! - டாட்டூவை வைத்துக் கண்டறிந்த உறவினர்கள்

தந்தி டிவி

அர்ஜெண்டினாவை சேர்ந்த டியாகோ பாரியா என்ற 32 வயது இளைஞரை கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் காணவில்லை.

விசாரணையில் , அன்று அவர் தென் சுபுட் மாகாணத்தில் உள்ள கடற்கரையோரம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மீனவர்களை பிடித்து விசாரித்த போது, டியாகோ பயணித்த இருசக்கர வாகனம் கிடந்த இடத்திற்கு அருகே மூன்று சுறாக்கள் பிடிபட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சுறாவை சுத்தம் செய்த போது, சுறாவின் வயிற்றுக்குள் டியாகோவின் உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது.

டியாகோவின் டாட்டூவை வைத்து அது டியாகோவின் உடல் தான் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"