தற்போதைய செய்திகள்

மும்பை விமான நிலையம் திடீர் மூடல்..! அதானி குழுமத்தின் கையில் உள்ள இந்தியாவின் 2-வது பெரிய விமான நிலையம்

தந்தி டிவி

மும்பை சத்திரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம், அதானி குழுமத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

டெல்லி விமான நிலையத்திற்கு அடுத்து, இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக, தினமும் சுமார் 800 விமானங்களை கையாள்கிறது.

9/27 என்ற பிரதான ஓடுதளம் மற்றும் அதன் குறுக்குவசமாக 14/23 என்ற இரண்டாம் நிலை ஓடுதளம் ஆகிய இரண்டு ஓடுதளங்களை கொண்டுள்ளது.

இந்த இரண்டு ஓடுதளங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, அக்டோபர் 18 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, விமான நிலையம் மூடப்பட உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பருவமழை முடிவடைந்த பின் நடத்தப்படும் முன் தடுப்பு பராமரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்று கூறியுள்ளது.

14/23 ஓடுதள எல்லைகளில் உள்ள விமான வழிகாட்டி விளக்குகளை மேம்படுத்தும் பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட உள்ளது.

விமான நிலையம் மூடப்படும் நேரத்தில் தரையிறங்க உள்ள விமானங்களின் பயண அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ