தற்போதைய செய்திகள்

மும்பை விமான நிலையம் திடீர் மூடல்..! அதானி குழுமத்தின் கையில் உள்ள இந்தியாவின் 2-வது பெரிய விமான நிலையம்

தந்தி டிவி

மும்பை சத்திரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம், அதானி குழுமத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

டெல்லி விமான நிலையத்திற்கு அடுத்து, இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக, தினமும் சுமார் 800 விமானங்களை கையாள்கிறது.

9/27 என்ற பிரதான ஓடுதளம் மற்றும் அதன் குறுக்குவசமாக 14/23 என்ற இரண்டாம் நிலை ஓடுதளம் ஆகிய இரண்டு ஓடுதளங்களை கொண்டுள்ளது.

இந்த இரண்டு ஓடுதளங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, அக்டோபர் 18 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, விமான நிலையம் மூடப்பட உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பருவமழை முடிவடைந்த பின் நடத்தப்படும் முன் தடுப்பு பராமரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்று கூறியுள்ளது.

14/23 ஓடுதள எல்லைகளில் உள்ள விமான வழிகாட்டி விளக்குகளை மேம்படுத்தும் பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட உள்ளது.

விமான நிலையம் மூடப்படும் நேரத்தில் தரையிறங்க உள்ள விமானங்களின் பயண அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்