தற்போதைய செய்திகள்

இன்று மாலை வானில் நிகழப்போகும் அதிசயம்... சூரியன் அஸ்தமித்ததும்... காண தயாரா? - அதிசயத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா?

தந்தி டிவி
• இன்று மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். • சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்று கவனிக்கும் போது இந்த அபூர்வ காட்சியை நாம் காணலாம் என நாசா விஞ்ஞானி பில் குக் தெரிவித்துள்ளார். • இரவில் தொடுவானம் தொட்டு மேலே பாதி வானம் வரையில் 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும் எனவும் அரை மணி நேரத்தில் புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் எனவும் தெரிவிக்கிறார்கள். • அதிசய காட்சியை நம்மால் வெறும் கண்களாலும் பார்க்க முடியும் எனக் கூறும் விஞ்ஞானிகள், வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவை எளிதாக தெரியும் எனவும் புதனும், யுரேனசும் மங்கலாக தெரிய வாய்ப்பு உள்ளதால் பைனாகுலர்ஸ் வசதியுடன் பார்ப்பது சிறந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை