தற்போதைய செய்திகள்

குடியிருப்புக்குள் காட்டுப்பன்றி உயிருடன் பிடிக்காமல் சுட்டுக் கொன்றதால் அதிர்ச்சி

தந்தி டிவி

கேரளாவில் தேவாலயத்திற்குள் புகுந்த காட்டு பன்றியை, பூட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதாத்தோடு பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டுப்பன்றி புகுந்த‌தால் மக்கள் அச்சமடைந்தனர். கூச்சல் சத்தம் கேட்டதால், அங்கும் இங்குமாக ஓடிய காட்டுப் பன்றி, மலக்கரை தேவாலயத்திற்குள் புகுந்த‌தும், வெளியேற விடாமல் கதவுகளை பூட்டி வைத்தனர். பின்னர், பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின் பேரில், துப்பாக்கி உரிம‌ம் வைத்திருந்த மோத்யூ என்பவர், காட்டுப் பன்றியை சுட்டுக் கொன்றார். தேவாலயத்திற்குள் அடைப்பட்ட காட்டுப் பன்றியை, வனத்துறையிடம் ஒப்படைக்காமல் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்