தற்போதைய செய்திகள்

குடியிருப்புக்குள் காட்டுப்பன்றி உயிருடன் பிடிக்காமல் சுட்டுக் கொன்றதால் அதிர்ச்சி

தந்தி டிவி

கேரளாவில் தேவாலயத்திற்குள் புகுந்த காட்டு பன்றியை, பூட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதாத்தோடு பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டுப்பன்றி புகுந்த‌தால் மக்கள் அச்சமடைந்தனர். கூச்சல் சத்தம் கேட்டதால், அங்கும் இங்குமாக ஓடிய காட்டுப் பன்றி, மலக்கரை தேவாலயத்திற்குள் புகுந்த‌தும், வெளியேற விடாமல் கதவுகளை பூட்டி வைத்தனர். பின்னர், பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின் பேரில், துப்பாக்கி உரிம‌ம் வைத்திருந்த மோத்யூ என்பவர், காட்டுப் பன்றியை சுட்டுக் கொன்றார். தேவாலயத்திற்குள் அடைப்பட்ட காட்டுப் பன்றியை, வனத்துறையிடம் ஒப்படைக்காமல் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு