தற்போதைய செய்திகள்

குடியிருப்புக்குள் காட்டுப்பன்றி உயிருடன் பிடிக்காமல் சுட்டுக் கொன்றதால் அதிர்ச்சி

தந்தி டிவி

கேரளாவில் தேவாலயத்திற்குள் புகுந்த காட்டு பன்றியை, பூட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதாத்தோடு பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டுப்பன்றி புகுந்த‌தால் மக்கள் அச்சமடைந்தனர். கூச்சல் சத்தம் கேட்டதால், அங்கும் இங்குமாக ஓடிய காட்டுப் பன்றி, மலக்கரை தேவாலயத்திற்குள் புகுந்த‌தும், வெளியேற விடாமல் கதவுகளை பூட்டி வைத்தனர். பின்னர், பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின் பேரில், துப்பாக்கி உரிம‌ம் வைத்திருந்த மோத்யூ என்பவர், காட்டுப் பன்றியை சுட்டுக் கொன்றார். தேவாலயத்திற்குள் அடைப்பட்ட காட்டுப் பன்றியை, வனத்துறையிடம் ஒப்படைக்காமல் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை