தற்போதைய செய்திகள்

கூட்டமாக சென்னை கடற்கரைக்கு வந்த சுறாக்கள்.. மீனவர் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

    ஆழ்கடல் பகுதியில் காணப் படும் அரிய வகை திமிங்கல சுறாக்கள் உணவுக்காக சிறிய வகை மீன்களைத் தேடி, சதுரங்கப்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 30 அடி நீளம் கொண்ட ஆழ்கடல் திமிங்கல சுறாக்களை அவர்கள் கடலில் பார்த்தனர். அதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வகை சுறாகள் கூட்டமாகத்தான் கடற்கரைக்கு வரும் என்றும், உணவு கிடைக்காத ஆத்திரத்தில் படகையே கவிழ்க்கும் ஆற்றல் கொண்டவை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"