தற்போதைய செய்திகள்

கூட்டமாக சென்னை கடற்கரைக்கு வந்த சுறாக்கள்.. மீனவர் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

    ஆழ்கடல் பகுதியில் காணப் படும் அரிய வகை திமிங்கல சுறாக்கள் உணவுக்காக சிறிய வகை மீன்களைத் தேடி, சதுரங்கப்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 30 அடி நீளம் கொண்ட ஆழ்கடல் திமிங்கல சுறாக்களை அவர்கள் கடலில் பார்த்தனர். அதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வகை சுறாகள் கூட்டமாகத்தான் கடற்கரைக்கு வரும் என்றும், உணவு கிடைக்காத ஆத்திரத்தில் படகையே கவிழ்க்கும் ஆற்றல் கொண்டவை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை