தற்போதைய செய்திகள்

சாதியை சொல்லி தீட்சிதர்கள் திட்டிய விவகாரம்.."கையெழுத்து போடும்படி போலீஸ் மிரட்டுறாங்க"-பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள், பட்டியலின பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கை ரத்து செய்ய கையெழுத்து போடும்படி போலீசார் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலா என்பவர், நடராஜர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றார்.

அங்கு தன்னை சாதி பெயரை சொல்லி தரிசனம் செய்ய அனுமதி மறுத்தாக, தீட்சிதர்கள் மீது ஜெயசீலா புகார் அளித்தார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று வழக்கை ரத்து செய்வதற்கு கையெழுத்து போடும்படி மிரட்டுவதாக ஜெயசீலா குற்றச்சாட்டியுள்ளார்.

காவல் ஆய்வாளர் உட்பட 8 போலீசார், வீட்டுக்கு வந்து மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளார். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்