தற்போதைய செய்திகள்

"அரசுக்கு உண்டியல் பணத்தை தர முடியாது" - அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பூசாரிகள் வாக்குவாதம்

தந்தி டிவி
• நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே அங்காளம்மன் கோயிலின் உண்டியல் பணத்தை தர முடியாது என அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • மறப்பறை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. • இந்த கோயிலில் காலம் காலமாக அதே பகுதியை சேர்ந்த சிலர் பூசாரி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. • மாசி மாதம் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவின் நிறைவு நாளில் வழக்கமாக கோயில் உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். • அதன்படி நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ண வந்தனர். • அப்போது, கோயில் பரம்பரை பூசாரிகள் இந்த கோயில் தங்களுக்கு சொந்தமானது என கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். • போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி வெளியே அழைத்து சென்றனர். • இதற்கிடையே, அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரை ஊராட்சி தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"