தற்போதைய செய்திகள்

கொடைக்கானல் மலைப்பாதையில் நேர்ந்த சம்பவம் - மன உளைச்சலில் உயிரை மாய்த்த சிறுவன்

தந்தி டிவி

கொடைக்கானல் மலைப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட தகராறின் போது ஆபாச வார்த்தைகளை கூறி திட்டியதாக 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலை சேர்ந்த விஜேஸ் பாண்டி என்ற சிறுவர் பெருமாள்மலை நோக்கி தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, மலைப்பாதையில் திரும்பும் போது நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது சிறுவர்களின் இரு சக்கர வாகனம் மோதியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த காரில் இருந்த நபர்கள் விஜேஸ் பாண்டியின் நண்பர்களை ஆபாச வார்த்தைகளை கூறி தாக்கி, வாகனத்தை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் தலையீட்டு சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, வீட்டிற்கு வந்த விஜேஸ் பாண்டி நடந்த சம்பவத்தை எண்ணி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, திடீரென விஜேஸ் பாண்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சிறுவனின் சகோதரர் போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், மெக்கானிக் வினோத் மற்றும் தங்கராஜ் ஆகிய இருவரை ஆபாசமாக திட்டுதல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை