• சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தோனி களமிறங்கியபோது ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானமே அதிர்ந்தது.
• சென்னை பேட்டிங்கின்போது கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார்.
• பின்னர் தோனி களமிறங்கியபோது தோனி, தோனி என முழங்கி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
• மேலும் தங்களின் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து தோனியை ரசிகர்கள் வரவேற்றனர்.
• ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக அடுத்தடுத்து 2 சிக்சர்களை தோனி பறக்கவிட்டார்.