தற்போதைய செய்திகள்

வங்கிகளில் கோடி கோடியாய் சுருட்டல். சிக்கிய உதவி மேனேஜர் உட்பட 13 பேர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளில், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய கடன் வழங்கி மோசடி செய்ததாக, வங்கி உதவி மேலாளர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழ் கோத்தகிரி, குன்னூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில், மத்திய அரசின் கிசான் கேஸ் கிரிடிட் திட்டத்தின் கீழ், விவசாயிகள் 24 பேரின் ஆவணங்களை பெற்று மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பிலான மதிப்பிலான விவசாய கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மூன்று கோடியே 61 லட்சம் ரூபாயை செலுத்திய பிறகு, வங்கி மேலாளர்கள், வனச்சரகர் உள்ளிட்டோர் அந்த தொகையை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில், நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விவசாயிகளை அழைத்து விசாரணை நடத்திய போது, மோசடி செய்தது அம்பலமானது. இதனிடையே, வங்கியின் உதவி மேலாளர் ஜெயராமன் உள்பட 13 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வங்கி மேலாளர் அனூஜ்குமார், வனத்துறை அதிகாரி கணேசன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?