தற்போதைய செய்திகள்

துணிக்கடையில் இருந்து கோடி கணக்கில்ஆடைகளை திருடி சென்ற மர்ம நபர்! - விசாரணையில் வெளியான அதிர்ச்சி

தந்தி டிவி

பழனியில் துணிக்கடை ஒன்றில் கோடி கணக்கில் ஆடைகள் திருடப்பட்ட விவகாரத்தின் வழக்கின் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணிக்கடை ஒன்றில் கோடிக்கணக்கான ஆடைகளை லாரி மூலம் மர்மநபர்கள் திருடி சென்றனர்.

காவலாளியையும் சேர்த்து கடத்தி சென்று, பின் பாதியிலே இறக்கிவிட்ட இந்த சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட துணிக்கடையின் உரிமையாளர் ஜோதி கணேஷும் , பொள்ளாச்சியை சேர்ந்த பரமகுரு என்பவரும் இணைந்து தொழில் செய்தது தெரிய வந்துள்ளது.

இதில், ஜோதி கணேஷ் சுமார் 40 லட்சம் மதிப்பிலான ஆடைகளை பரமகுருவிடம் இருந்து பெற்றுக் கொண்டு பணம் தராமல் இழுத்து அடித்துள்ளார்.

இதனால், ஜோதி கணேஷ் மீது பரமகுரு போலீசில் புகாரளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னனியில் பரமகுரு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரை தேடி வரும் போலீசார், பரமகுரு மீது வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.

இதனை தொடர்ந்து, சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடைகள் காணமல் போகியுள்ளதாக தெரிவித்த ஜோதி கணேஷிடம் போலீசார் 2 கோடி ஆடைக்கான ரசீதை கேட்டுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்