தற்போதைய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்... தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்

தந்தி டிவி

திருப்போரூர் அடுத்த வாணியஞ்சாவடி அருகே தனியார் விடுதியில் வசித்து வருபவர் சூரத்பகதூர்.

நேபாளத்தை சேர்ந்தவரான இவரின் 5 வயது மகன் ராஜேஷ், விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, தீடீரென மாயமான சிறுவனை காணவில்லை என கூறி பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை