தற்போதைய செய்திகள்

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்...அள்ளி கொண்டு வந்து மொத்தமாக அழிப்பு

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 5270 கிலோ மாம்பழங்கள் அதிகாரிகள் முன்னிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. திருச்சி மாம்பழச் சாலையில் ரவிச்சந்திரன் என்பவர் மாம்பழங்கள் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மாம்பழ குடோனில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ரசாயனம் தெளித்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து 5270 கிலோ எடையுள்ள மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவு பகுப்பாய்வுக்காக சென்னை ஆய்வாக கூடத்திற்கு இரண்டு மாதிரிகளை அனுப்பி வைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொண்டு சென்று அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இது போன்று சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ரசாயனம் கலந்து உணவு பொருட்களை விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்