தற்போதைய செய்திகள்

மரத்தின் இலையால் பறிபோன உயிர் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் வில்லியனூர் கிராமத்தில் பக்கத்து வீட்டு மரத்தின் இலைகள், தன் வீட்டினுள் விழுவதாக கூறி தகராறு செய்தவர் கொலை செய்ப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வில்லியனூர் கிராமத்தில் ஆனந்தராஜ்

மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அருகருகே வசித்து வந்தனர். நேற்றிரவு இருவரும் மது அருந்திய நிலையில், அப்போது ஆனந்தராஜ் வீட்டில் உள்ள மரத்தின் இலைகள் தன்னுடைய வீட்டில் விழுவதாக கூறி, ஹரிகிருஷ்ணன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து ஹரிகிருஷ்ணனை தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயடைந்த ஹரிகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வளவனுர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"