தற்போதைய செய்திகள்

மரத்தின் இலையால் பறிபோன உயிர் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் வில்லியனூர் கிராமத்தில் பக்கத்து வீட்டு மரத்தின் இலைகள், தன் வீட்டினுள் விழுவதாக கூறி தகராறு செய்தவர் கொலை செய்ப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வில்லியனூர் கிராமத்தில் ஆனந்தராஜ்

மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அருகருகே வசித்து வந்தனர். நேற்றிரவு இருவரும் மது அருந்திய நிலையில், அப்போது ஆனந்தராஜ் வீட்டில் உள்ள மரத்தின் இலைகள் தன்னுடைய வீட்டில் விழுவதாக கூறி, ஹரிகிருஷ்ணன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து ஹரிகிருஷ்ணனை தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயடைந்த ஹரிகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வளவனுர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்