தற்போதைய செய்திகள்

மலை மேல் வரைந்த பிரம்மாண்ட ஓவியம்...

தந்தி டிவி

பச்சை பசேல்னு இருக்ற இந்த மலையோட உச்சியில ரெண்டு குழந்ததைகள் உட்காந்திருக்ற மாதிரி... தத்ரூபமா தெரியில இந்த காட்சிய ஓவியம்னு சொன்ன நீங்க நம்புவீங்களா...

நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்... சுச்சர்லாந்த சேர்ந்த ஓவியர் SAYPE அப்படிங்கறவரு... இங்க உள்ள ஒரு மலை மேலதான் இந்த ஓவியத்த வரைஞ்சிருக்காரு.

கிட்டத்தட்ட 3000 சதுர அடி இருக்குற புல்வெளியில வரைஞ்ச இந்த ஓவியத்துல... அவரு எந்தவிதமான பெயிட்டையும் யூஸ்பண்ணலையாம் . அப்படி எப்படிப்பா இத பண்ணாருனு பாத்தா... வெறும் சாக்பீஸையும் , கரி துண்டை மட்டுமே வச்சு வித்த காட்டிருக்காறு மனுசன்...

சரி... எதுக்காக இப்டி ஒரு முயற்சி... இந்த ஓவியம் மூலமா என்ன சொல்ல வறிங்கனு கேட்டப்பதான், ஒரு சூப்பர் மேட்டர சொன்னாரு SAYPE...

இந்த உலகத்த குழந்தைங்க வேற வேற மாதிரியான கண்னோட்டத்துல பாக்றாங்க, ஓவ்வெரு குழந்தையும் அவங்களுக்குனு தனித்துவத்தோட வளரனும், அதுல யாரும் தலையிடக் கூடாதுனு சொல்ற விதமாதான்... இரண்டு குழந்தைகளும் வேற வேற படங்கள வரையிர மாதிரி... பிரம்மாண்ட ஓவியத்த வரைஞ்சுருக்காறாம்...

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்