தற்போதைய செய்திகள்

ரஷ்யாவில் வெடித்த‌து உள்நாட்டு போர்? வாக்னர் படைப்பிரிவுக்கும் ராணுவத்திற்கும் மோதல்

தந்தி டிவி

ரஷ்யாவின் வாடகை ராணுவம், நாட்டின் ஒருசில நகரங்களை கைப்பற்றியுள்ளதால் உள்நாட்டு போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது..

உக்ரைன் போரில் ரஷ்ய அரசு, வாக்னர் குரூப் (Wagner group) எனப்படும் வாடகை ராணுவத்தை பயன்படுத்தியது. ஆனால் போர்க் களத்தில் வாக்னர் படைப்பிரிவுக்கு, ரஷ்ய ராணுவம் போதிய ஆயுத உதவிகளை வழங்காத‌தால், வாக்னர் படை வீர‌ர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, உக்ரைன் போரில் இருந்து வாக்னர் படைப்பிரிவு பின்வாங்கியதோடு, ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த‌து. இந்நிலையில், ரஷ்யாவின் ரோஸ்டோவ்(Rostov) நகரை வாக்னர் படைப்பிரிவு அதிரடியாக கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்திற்கும், வாக்னர் படைப்பிரிவுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரஷ்யா முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதோடு, தலைநகர் மாஸ்கோவில்(moscow) கவச வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்