கர்நாடகாவில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவரது வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மைசூரில் பிரதமர் மோடி திறந்த வெளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனத்தின் முன்புறம் செல்போன் ஒன்று வந்து விழுந்தது. இது குறித்து விசாரிக்கப்பட்டதில், அந்த செல்போன் பாஜகவைச் சேர்ந்த பெண்ணுடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உற்சாக மிகுதியால் செல்போனை வீசியதாகவும், தவறான நோக்கத்தில் வீசவில்லை என அப்பெண் விளக்கமளித்ததாக, பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.