கர்நாடகா தேர்தல்

கேள்வி கேட்ட இளைஞருக்கு 'பளார்'... மாஜி அமைச்சர் செயலால் அதிர்ச்சி

தந்தி டிவி

தொகுதியில் என்ன வளர்ச்சி பணிகளை செய்துள்ளீர்கள் என கேள்வி கேட்ட இளைஞரை, பளார் என கர்நாடக முன்னாள் அமைச்சர் அறைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபலீஸ்வர‌ர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல், பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தேவபுரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், கேள்வி எழுப்பினார். அப்போது, பாட்டீலும், அவரது ஆதரவாளர்களும் தோளில் தட்டிக் கொடுத்து அமருமாறு கூறினர். அதையும் மீறி அந்த இளைஞர் கேள்வி கேட்டதால், ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல், கன்னத்தில் பளார் என அறைந்தார். பிரச்சாரத்தின்போது கேள்வி கேட்டவரை அறைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்