கர்நாடகா தேர்தல்

கேள்வி கேட்ட இளைஞருக்கு 'பளார்'... மாஜி அமைச்சர் செயலால் அதிர்ச்சி

தந்தி டிவி

தொகுதியில் என்ன வளர்ச்சி பணிகளை செய்துள்ளீர்கள் என கேள்வி கேட்ட இளைஞரை, பளார் என கர்நாடக முன்னாள் அமைச்சர் அறைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபலீஸ்வர‌ர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல், பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தேவபுரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், கேள்வி எழுப்பினார். அப்போது, பாட்டீலும், அவரது ஆதரவாளர்களும் தோளில் தட்டிக் கொடுத்து அமருமாறு கூறினர். அதையும் மீறி அந்த இளைஞர் கேள்வி கேட்டதால், ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல், கன்னத்தில் பளார் என அறைந்தார். பிரச்சாரத்தின்போது கேள்வி கேட்டவரை அறைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING || ரெக்கார்ட் பிரேக்.. ஆஸ்கர் வரலாற்றிலேயே முதல்முறை.. 16 பிரிவுகளில் ஒரே படம்

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்