ரஜினி மகளின் நகைகள் கொள்ளை.. பணிப்பெண் மற்றும் அவர் கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

Update: 2023-03-21 07:58 GMT
  • தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அறியப்படுபவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
  • இவர் சென்னை போயஸ்கார்டனில் வசித்து வரும் நிலையில், வீட்டின் லாக்கரில் இருந்து 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்திருந்தார்.
  • இந்த சம்பவத்தில் வீட்டின் லாக்கரில் நகைகள் வைத்திருந்தது வீட்டு ஊழியர்கள் மற்றும் கார் ஓட்டுநருக்கு மட்டும் தான் தெரியும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்