டெல்லி தந்த அழுத்தமா..? CM ரங்கசாமி முடிவின் பின்னணி... ஓப்பனாக உடைத்த செல்வகணபதி

Update: 2024-03-10 13:10 GMT

புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்குத் தர வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதி கூறியுள்ளார். புதுச்சேரியில் பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை மற்றும் மக்களின் கருத்து கேட்பு வாகனத்தை கட்சியின் மாநிலத்வர் செல்வகணபதி, மாநில அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வகணபதி, புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு கொடுக்குமாறு முதல்வர் ரங்கசாமிக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் அவரின் கருத்தை கேட்டு அதன்படிதான் பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்