``பலாப்பழ சின்னத்துல ஒரு குத்து.. இரட்டை இலைல ஒரு குத்து'' - ராம்நாட்டை அலறவிடும் இவர் யார்?

Update: 2024-04-16 09:01 GMT

#ops #edappadipalanisamy #admk

இராமநாதபுரத்தில் நடந்த ஓ.பி.எஸ். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இராமநாதபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரண்மனை, கேணிக்கரை, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ஓ.பி.எஸ். பிரச்சார வாகனத்தின் முன்பு பலாப்பழ சின்னத்திற்கு வாக்குதிரட்டியபடிவந்த அ.தி.மு.க தொண்டர் ஒருவர், இரட்டை இலைக்கு தான் தனது ஓட்டு என்றும், ஓ.பி.எஸ். பிடிக்கும் என்பதால் ஊர்வலத்தில் பங்கேற்றதாகக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்