ஈரானுக்கு கத்தார் எச்சரிக்கை
ஈரானின் ஏவுகணைகளை தங்களது ராணுவம் இடைமறித்து நடுவானிலேயே அழித்ததாக கத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு இல்லை, உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. எந்த விதத்திலும் கத்தாருக்கு வரும் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.