சிலி நாட்டில், ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 35 பேரை தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். அந்நாட்டில், வினா டெல் மார் நகரத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில், இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ராட்சத ராட்டினத்தின் இயக்கம் திடீரென தடைபட்டு நின்றது. இதனால், அதில் சவாரி செய்த 35 பேரும் அந்தரத்தில் சிக்கி தவித்தனர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்கப்பட்டனர்.