இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் 124 படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏழு படகுகளை மட்டும் மீண்டும் மீனவர்களிடமே, வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில் 33 படகுகளை அரசுடைமையாக்கி உத்தரவிடப்பட்டதை அடுத்து, அவை துண்டுகளாக உடைக்கப்பட்டு அச்சு வேலி கைத்தொழில் பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.