Thiruvallur School Student Death Issue | ஒப்படைக்கப்பட்ட மாணவனின் உடல் - கதறி அழுத பெற்றோர்
Thiruvallur School Student Death Issue | ஒப்படைக்கப்பட்ட மாணவனின் உடல் - கதறி அழுத பெற்றோர்
ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து உயரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அமைச்சர் நாசரின் வாகனத்தை வழிமறித்தும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆட்சியர் மேற்கொண்ட பேச்சுவாரத்தையில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவராண நிதியும், அவரது தந்தைக்கு ஊரக வளர்ச்சி துறையில் அரசு பணியும் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவனின் உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் திருத்தணி மருத்துவமனையில் இருந்து கலைந்து சென்றனர். மாணவனின் உடல், அவரது கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.