திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 10 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய ஆலிவ் வகை ஆமையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து ஆமைகள் இறந்து வருவது தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெருவிக்கின்றனர். ஆமை இறப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மீன் வளத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.