Tamil Puthalvan Scheme|``5 மாதமாக தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் ஊக்கத்தொகை ’’ - மாணவர்கள் புகார்
தமிழ் புதல்வன், புதுமைப்பெண் ஊக்கத்தொகை - மாணவர்கள் புகார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூரில், கடந்த 5 மாதங்களாக தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருப்பதாக கூறிய மாணவர்கள், ஊக்கத்தொகை கிடைக்காததால் கல்வி, பேருந்து கட்டணத்திற்கு சிரமமாக இருப்பதாக வேதனை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம், துரித நடவடிக்கை எடுத்து, ஊக்கத்தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்...