மருத்துவம் மற்றும் ஐஏஎஸ் பணி என இரண்டுமே தனக்கு 2 கண்கள் போன்றவை என, ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரவிந்த் ராதாகிருஷ்ணன் மருத்துவராக பணியாற்றிக் கொண்டே, யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 80வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், மருத்துவ படிப்பு மற்றும் ஐஏஎஸ் பணி தேர்வு என எதுவுமே கடினம் கிடையாது, அதே வேளையில் எதுவுமே எளிதும் கிடையாது என்று கூறினார்.