அரசு பஸ்சில் தயிருக்கு லக்கேஜ் கட்டணம் - மக்கள் வேதனை
அரசுப் பேருந்தில் தயிருக்கு லக்கேஜ் கட்டணம் வாங்குவதால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை,சின்ன புதுக்கோட்டையை சேர்ந்த மக்கள் விற்பனைக்காக தயிரை பாத்திரத்தில் கட்டி, டவுன் பஸ்சில் எடுத்து செல்வது வழக்கம். கடந்த 35 வருடங்களாக இதற்கு லக்கேஜ் கட்டணம் வாங்கவில்லை . ஆனால் கடந்த 2 நாட்களாக கட்டணம் வசூலிப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.