பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைத்தால் விஜய் கூறியதை வரவேற்கிறேன்"
பரந்தூர் மக்களுடன் கோட்டைக்கு சென்று போராடுவேன் என விஜய் கூறியிருப்பதன் மூலம், பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைத்தால், அதை வரவேற்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றதாகவும், ஆனால் இழப்பீடு தருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் கூறினார்.