Madurai | மரக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - சிறுவர்களுக்கு வலைவீச்சு!

Update: 2025-06-16 03:42 GMT

மதுரை வாகைக்குளம் மிளகரணை அருகே போதைக்கு பயன்படுத்துவதற்காக மர சாமான்களை ஒட்டும் பேஸ்ட்டை தர மறுத்ததால், கதவுகள் தயாரிக்கும் நிறுவனத்தில் சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டேனியல் என்பவருக்குச் சொந்தமான மரக்கடையில், பேஸ்ட்டின் காலி டப்பாக்களை கேட்டு வந்த சிறுவர்களுக்கு, உரிமையாளர் அவற்றை தர மறுத்ததால் ஆத்திரத்தில் சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பினர். இதனால் ஒரு வாகனத்தின் டயர் எரிந்து சேதமடைந்தது. இது குறித்த புகாரின் பேரில், கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்