மறைந்த நடிகர் ராஜேஷ் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரது மகள் கனடாவில் இருந்து சென்னை திரும்பினார். உடல் நலக்குறைவால் கடந்த 29ம்தேதி காலமான பிரபல நடிகர் ராஜேஷின் உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஷின் மகள் திவ்யாவின் வருகைக்காக, அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு, இறுதிச்சடங்குகள் நாளை 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானம் மூலம் கனடாவில் இருந்து நள்ளிரவில் சென்னை திரும்பிய அவரது மகள் திவ்யா தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.