கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் ஒரே நேரத்தில் 121 பேரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். கடந்த 2022 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.