பழனி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்

Update: 2025-08-20 08:40 GMT

40 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்ட ரோப் கார்

பழனி முருகன் கோயிலில் 40 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்ட ரோப் காரில் பக்தர்கள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தரும் நிலையில் முதியவர்கள் மாற்றுத் திறனாளி பக்தர்கள் எளிதாக மலை மீது சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் ரோப் கார் மற்றும் வின்ச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வருடம் தோறும் ஒரு மாதம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 11 ம் தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மீண்டும் இயக்கப்பட்டது இதில் பக்தர்கள் ஆர்வமுடன் பயணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்