Extra Marital Affairs | பிறன்மனை நோக்கிய நபர் - அறுத்து எறியப்பட்ட அந்தரங்க உறுப்பு
கள்ளக்காதல் விவகாரம் - கூலி தொழிலாளியின் மர்மஉறுப்பு அறுப்பு
விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில், கூலி தொழிலாளியின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மரகதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சங்கருக்கும், இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பு என்பவருக்கும் கள்ளக்காதல் விவகாரத்தில் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மரகதபுரம் ஆற்றங்கரையோரம் உடலில் பலத்த காயங்களுன் மர்மஉறுப்பு அறுபட்ட நிலையில் சங்கர் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.