விழுப்புரத்தில் சேதம் அடைந்து காணப்படும் அரசு பேருந்தில் பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் லக்கேஜ் வைக்கும் பகுதி கழன்று விழும் வகையில் உள்ளது. சேதம் அடைந்த பாகங்கள் பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், பேருந்தை சீரமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.