உதகை தொட்டபெட்டா வனப்பகுதியில் சுற்றித்திரிந்த கரடி, ரோந்து பணியில் இருந்த போலீசாரின் வாகனத்தை தாக்க முயன்றது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானை ஒன்று தொடர்ந்து உலா வரும் அதே பகுதியில் உணவு தேடி வந்த கரடி, சாலையோர கடை அருகே தஞ்சம் அடைந்து, பின்னர் வனப்பகுதிக்குள் ஓடியது. இதனை வனத்துறையினர் வீடியோ எடுத்த நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.