உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் தலைகவசம் அணியாததால் பெட்ரோல் போட மறுத்த பெட்ரோல் நிலைய பெண் ஊழியரை வாடிக்கையாளர் தாக்கினார். இதற்கு பெண் ஊழியரும் பதில் தாக்குதல் நடத்தியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.