ஷூவுக்குள் இருந்து படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு | பதற வைக்கும் அதிர்ச்சி காட்சி
கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 40 பாம்புகள் பிடிபட்டுள்ளன.. கடலூர் சாவடி பகுதியில் தமிழ் என்பவரது வீட்டில் இருந்த ஒரு ஷுவிற்குள் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வன ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த செல்லா பாம்பினை பிடிக்க முற்பட்டபோது அது படம் எடுத்து ஆடியது. படம் எடுத்த நல்ல பாம்பினை அவர் லாவகமாக பிடித்து காப்புக்காட்டில் விட்டார்.