TVK Vijay Karur Stampede | Vijay Campaign | கரூர் பெருந்துயரம் குறித்து வதந்தி - மூவர் கைது

Update: 2025-09-30 01:59 GMT

கரூரில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக, பாஜகவை சேர்ந்த ஒருவர், தவெகவை சேர்ந்த இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 25 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த பாஜக கலை மற்றும் கலாச்சாரத்துறை மாநில செயலாளர் சகாயம் மற்றும் தவெகவினரான மாங்காட்டை சேர்ந்த சிவனேசன் மற்றும் ஆவடியை சேர்ந்த சரத்குமார் ஆகியவர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்