அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக புதிய சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இதனை தெரிவித்தார்.