Thanjavur | Farmers | வேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி

Update: 2025-10-25 03:25 GMT

மழையால் 33 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் உள்ள கீழகோயில்பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின், அமைச்சர் இதனை தெரிவித்தார். அதிகாரிகள் கணக்கீடு செய்த பிறகு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்