"பால் விலை உயர்வு - நவ.15ல் பாஜக ஆர்ப்பாட்டம்"

Update: 2022-11-08 01:51 GMT

ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சின்னப்பா கணேசன் என்பவர் எழுதிய ' மோடியின் தமிழகம் ' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

புத்தகத்தை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்