செந்தில் பாலாஜி மீதான வழக்கு - அமலாக்கத்துறை பதிலளிக்க கால அவகாசம்
சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் சாட்சி விசாரணையை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் தாக்கல் செய்த மனுவுக்கு, அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
மேலும் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.