உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடி அருகே ஆற்றுப்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர் சங்கர் குமார் மரண செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். காவலரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்