விடிந்தால் மாறும் தேசத்தின் தலையெழுத்து... "நக்சல் தாக்குதல் அச்சுறுத்தல்.." - உச்சகட்ட பாதுகாப்பு

Update: 2024-04-18 11:17 GMT

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நக்சல் அச்சுறுத்தல் உள்ள மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது... மகாராஷ்டிராவில் நக்சல் பாதிப்பு வனப்பகுதியான கட்சிரோலி மற்றும் சத்தீஸ்கரின் நாராயண்பூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, சமீபத்தில் சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட என்கவுண்ட்டரில் 29 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நக்சல் அச்சுறுத்தல் உள்ள இப்பகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்