"கரூர் துயரம்... அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" - ஆர்.கே.செல்வமணி
கரூர் சம்பவத்தில் இருந்து அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சிவகிரியில் பேட்டி அளித்த அவர், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கூட்டம் உணர்ந்து அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.